​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவள்ளூரில் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்த 4 பேர் கைது

Published : Sep 13, 2024 10:39 AM

திருவள்ளூரில் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்த 4 பேர் கைது

Sep 13, 2024 10:39 AM

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள குமாரராஜபேட்டை மற்றும் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், அரவிந்தன், பிரகாஷ், அஜித் ஆகியோரின் வங்கிக் கணக்கில் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தகவலின் அடிப்படையில் அவர்களுடைய வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு, வங்கிக் கணக்கு விவரங்கள், குடும்பப் பின்னணி, தொழில் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர். பின்னர்,  அவர்களைக் கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.