​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வந்தவாசியில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ 16,500 திருடிய நபர் கைது

Published : Sep 13, 2024 9:40 AM

வந்தவாசியில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ 16,500 திருடிய நபர் கைது

Sep 13, 2024 9:40 AM

வந்தவாசியில் உள்ள SBI வங்கியின் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவது போல் நடித்து 16ஆயிரத்து 500 ரூபாயைத் திருடிய சிவானந்தம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஏழுமலை என்ற முதியவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.அப்போது அருகில் இருந்த இளைஞர் உதவி செய்வது போல் வந்து பணம் இல்லை என்று கூறி வேறு ஒரு ஏடிஎம் செல்லுமாறு அனுப்பியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் ஏழுமலையின் செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததை தொடர்ந்து ஏழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்