​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வேரோடு பிடுங்கி மறுநடவு செய்த நெடுஞ்சாலைத் துறை

Published : Sep 13, 2024 8:55 AM

பொள்ளாச்சி அருகே சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வேரோடு பிடுங்கி மறுநடவு செய்த நெடுஞ்சாலைத் துறை

Sep 13, 2024 8:55 AM

பொள்ளாச்சி அருகே, சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டாமல் அப்படியே வேரோடு பிடுங்கி மறுநடவு செய்யப்பட்டது.

நா.மு.சுங்கம் முதல் மஞ்சநாயக்கனூர் ஆத்து பாலம் வரையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக, 10 மரங்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, இயற்கை ஆர்வலர்கள் மூலமாக புங்கை, வேம்பு, ஆலமரங்களை கிரேன் மற்றும் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக வேருடன்அப்புறப்படுத்தி மறுநடவு செய்தனர்.