​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெளிநாட்டில் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை மீட்டுத் தருமாறு 2 குழந்தைகளுடன் பெண் கண்ணீருடன் கோரிக்கை

Published : Sep 12, 2024 9:22 AM

வெளிநாட்டில் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை மீட்டுத் தருமாறு 2 குழந்தைகளுடன் பெண் கண்ணீருடன் கோரிக்கை

Sep 12, 2024 9:22 AM

மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பிரபாகரன் என்பவர் கடந்த மார்ச் மாதம் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், கடந்த ஞாயிறன்று அவர் உயிரிழந்து விட்டதாக அங்கிருந்தவர்கள் போன் செய்து சொல்லி உள்ளார்கள். கடன் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக மலேசியாவில் இருந்து கூறியுள்ளனர்.