​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விநாயகர் சதுர்த்தி பலகாரங்களை எடுத்துச் சென்றபோது 11-ஆம் வகுப்பு சிறுமியை கையில் கடித்த 'லாப்ரடார்' நாய்

Published : Sep 10, 2024 7:15 PM

விநாயகர் சதுர்த்தி பலகாரங்களை எடுத்துச் சென்றபோது 11-ஆம் வகுப்பு சிறுமியை கையில் கடித்த 'லாப்ரடார்' நாய்

Sep 10, 2024 7:15 PM

சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியன்று அண்டை வீட்டாருக்கு பலகாரங்களை எடுத்துச் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி மீது பாய்ந்த வளர்ப்பு லாப்ரடார் நாய் கடித்ததில் ரக்க்ஷிதா என்ற சிறுமியின் கையில் ரத்தம் காயம் ஏற்பட்டுள்ளது.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், நாயை விரட்டி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த லாப்ரடார் நாய் ஏற்கனவே ஒருவரை கடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதன்பிறகும் அதனை கட்டிவைக்காத உரிமையாளர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.