​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் 7 ஆண்டுகளாக மாணவர்கள் வைத்த கோரிக்கைக்கு தீர்வு... ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

Published : Sep 10, 2024 1:29 PM

திருச்சியில் 7 ஆண்டுகளாக மாணவர்கள் வைத்த கோரிக்கைக்கு தீர்வு... ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள்

Sep 10, 2024 1:29 PM

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு பேருந்து வசதி கோரி மாணவர்கள் மேற்கொண்ட பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வடக்கிபட்டி, ஊர்க்காடு, ராசாம்பாளையம் உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர் 100க்கும் மேற்பட்டோர் தினமும் மூன்றரை கிலோ மீட்டர் பள்ளிக்கு நடந்து சென்று வந்த நிலையில், பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.