​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்ணனின் திருமணத்துக்கு வந்த தம்பி கத்தியால் குத்திக் கொலை.. நண்பர்களுக்கு மது, கஞ்சா பார்ட்டி வைத்தபோது நேர்ந்த விபரீதம்

Published : Sep 09, 2024 6:05 PM

அண்ணனின் திருமணத்துக்கு வந்த தம்பி கத்தியால் குத்திக் கொலை.. நண்பர்களுக்கு மது, கஞ்சா பார்ட்டி வைத்தபோது நேர்ந்த விபரீதம்

Sep 09, 2024 6:05 PM

கோவை செட்டி வீதியில் அண்ணனின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர், நண்பர்களுடன் மது, கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் என்ற அந்த இளைஞர், தனது அண்ணன் திருமணத்தையொட்டி, நண்பர்களுக்கு மது, கஞ்சா பார்ட்டி வைத்துள்ளார்.

அசோக் நகர் பாலாஜி அவன்யூ பகுதியில் இவர்கள் மது அருந்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கும்பல், இவர்களிடம் வம்பிழுத்து, கோகுலை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

முதல்கட்ட விசாரணையில் பணி செய்யும் இடத்தில் அதிக சப்தத்துடன் பாடல் இசைக்கப்பட்டதே மோதலுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.