​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் அரசுப் பள்ளிகளில் சொற்பொழிவு... 3 நாட்களில் அறிக்கை தாக்கல்

Published : Sep 09, 2024 12:34 PM

சென்னையில் அரசுப் பள்ளிகளில் சொற்பொழிவு... 3 நாட்களில் அறிக்கை தாக்கல்

Sep 09, 2024 12:34 PM

சென்னை, அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு நடத்திய விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், தேவைப்பட்டால் இன்றும் நாளையும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியபிறகு புதன்கிழமை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.