​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி பேரணியில் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்

Published : Sep 09, 2024 6:56 AM

இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி பேரணியில் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்

Sep 09, 2024 6:56 AM

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவரது பாகிஸ்தான் தெஹிரீக்-இ-இன்சாப் கட்சியினர் மாபெரும் பேரணி நடத்தினர்.

அப்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தினரைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

அரசுக் கருவூலத்தில் இருந்த பரிசுப் பொருள்களை விற்று ஊழல் செய்ததாக தோஷாகானா வழக்கில் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி அவரது கட்சியினர் பேரணி நடத்தினர்.