​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை.. பார்லருக்கு சீல்.. மூவர் கைது..!

Published : Sep 07, 2024 3:51 PM

விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை.. பார்லருக்கு சீல்.. மூவர் கைது..!

Sep 07, 2024 3:51 PM

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியிலுள்ள ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில், விஸ்கி கலந்த போதை ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டதாக பார்லருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஒரு கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அடிப்படையில் விஸ்கியை கலந்து விற்பனை செய்து வந்த பார்லர் உரிமையாளர் சரத்சந்திரா ரெட்டி உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.