​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கைதான அரசு மருத்துவர் 'சஸ்பெண்ட்'..!

Published : Sep 06, 2024 4:53 PM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கைதான அரசு மருத்துவர் 'சஸ்பெண்ட்'..!

Sep 06, 2024 4:53 PM

திருச்சி மேலப்புதூர் அருகே தனியார் தொடக்கப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர் சாம்சனை பணியிடை நீக்கம் செய்து பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தனது தாய் கிரேஸி சகாயராணி தலைமை ஆசிரியையாக உள்ள தொடக்கப்பள்ளி விடுதியில் அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்ய வந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக சாம்சனும், அவரது குற்றத்தை மறைத்ததாக கிரேஸி சகாயராணியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கிரேஸி சகாயராணியை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.