​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம்.. டீ குடித்துக் கொண்டிருந்தவருக்கு அரிவாள் வெட்டு..!

Published : Sep 06, 2024 4:27 PM

பெண் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம்.. டீ குடித்துக் கொண்டிருந்தவருக்கு அரிவாள் வெட்டு..!

Sep 06, 2024 4:27 PM

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த குணசேகரன் என்பவரை, முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தனது வீட்டின் அருகே வசிக்கும் பெண்ணுக்கும், குணசேகரனுக்கும் இடையேயான தொடர்பை ஆலங்குடியைச் சேர்ந்த சிவா என்பவர் 5 மாதங்களுக்கு முன்பு தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. சிவா வெளிநாடு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டினருக்கு குணசேகரன் மிரட்டல் விடுத்ததாகவும், சிவா ஊருக்கு திரும்பிய நிலையில், அதற்கு பழிவாங்கவே நண்பர்களுடன் சென்று குணசேகரனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.