​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூரில் பெண் குழந்தையை பப்பாளி பால் ஊற்றி கொன்ற பெற்றோர்... அடைக்கலம் கொடுத்த பெண் உள்பட 3 பேர் கைது

Published : Sep 06, 2024 12:58 PM

வேலூரில் பெண் குழந்தையை பப்பாளி பால் ஊற்றி கொன்ற பெற்றோர்... அடைக்கலம் கொடுத்த பெண் உள்பட 3 பேர் கைது

Sep 06, 2024 12:58 PM

வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் அருகே இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதனை பப்பாளி பால் ஊற்றி கொலை செய்து புதைத்துவிட்டு, முதல் குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான தம்பதியையும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.

பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சேட்டு-டயானா தம்பதிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி பிறந்த குழந்தை ஒன்பதே நாளில் உயிரிழந்ததையடுத்து, குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக டயானாவின் தந்தை சரவணன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டபோது உண்மை தெரிய வந்த நிலையில், உமாபதி என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்த சேட்டு-டயானா மற்றும் உமாபதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.