​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செங்கல்பட்டில் மரக்கிளையில் கட்டப்பையில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

Published : Sep 06, 2024 6:34 AM

செங்கல்பட்டில் மரக்கிளையில் கட்டப்பையில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு

Sep 06, 2024 6:34 AM

செங்கல்பட்டு அடுத்துள்ள பெருந்தண்டலத்தில் மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த கட்டைப்பையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையை கிராம மக்கள் மீட்டனர்.

குழந்தை அழுகுரல் கேட்டு ஏரிக்கரையில் ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிலர் மரத்தின் மீதேறி குழந்தையை மீட்டதோடு 108 ஆம்புலன்ஸ் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.