​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளி மாணவியிடம் அநாகரிகப் பேச்சு - பயிற்சியாளர் அதிரடி கைது..!

Published : Sep 05, 2024 4:03 PM

பள்ளி மாணவியிடம் அநாகரிகப் பேச்சு - பயிற்சியாளர் அதிரடி கைது..!

Sep 05, 2024 4:03 PM

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அரசுப் பள்ளியில் அறிவியல் பிராக்டிக்கல் பயிற்சி அளிக்கச் சென்ற தன்னார்வலர், மாணவியிடம் அநாகரிகமாக பேசியதாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்தில் கண்ணார்பாளையத்தைச் சேர்ந்த அய்யாசாமி, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், எங்கள் வகுப்பிற்கு எப்போது பாடம் எடுக்க வருவீர்கள் என்று கேட்டதாகவும் இரவு 11 மணிக்கு வருகிறேன், பாய் எடுத்து வை என்று அய்யாசாமி அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் மாணவி தகவல் அளித்த நிலையில்,பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தன்னார்வலர் அய்யாசாமியிடம் விசாரணை நடத்தி, அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்.