​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழையின் போது விபத்து நடந்த இடத்தில் கிடைத்த மண்டை ஓடு.. போலீசார் தீவிர விசாரணை..!

Published : Sep 05, 2024 3:04 PM

மழையின் போது விபத்து நடந்த இடத்தில் கிடைத்த மண்டை ஓடு.. போலீசார் தீவிர விசாரணை..!

Sep 05, 2024 3:04 PM

கடந்த ஆண்டு சென்னை, கன மழையின் போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் 50 அடி பள்ளத்தில் மண் சரித்து, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த பகுதியில் தற்போது கிடைத்துள்ள மண்டை ஓடு, விபத்தில் சிக்கிய மேற்கு வங்க தொழிலாளி தீபக் பக்டியின் உடல் பாகமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிசம்பர் 4 அன்று 50 அடி கட்டுமான பள்ளத்தில் வெள்ளம் புகுந்து சகதியில் சிக்கிக் கொண்ட நரேஷ் மற்றும் ஜெயசீலன் ஆகியோரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் சடலமாக மீட்டனர். கட்டுமான இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தீபக் பக்டியின் நிலை என்ன என்று தெரியாததால் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அங்கு மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், மண்டைஓடு கிடைத்துள்ளது.