​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொல்கத்தாவில் இருளில் மூழ்கியது ஆளுநர் மாளிகை... மருத்துவ மாணவி கொலையைக் கண்டித்து தொடர் போராட்டம்

Published : Sep 05, 2024 6:47 AM

கொல்கத்தாவில் இருளில் மூழ்கியது ஆளுநர் மாளிகை... மருத்துவ மாணவி கொலையைக் கண்டித்து தொடர் போராட்டம்

Sep 05, 2024 6:47 AM

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு 9 மணி முதல் சுமார் ஒருமணி நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டன.

சம்பவம் நடந்த மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து போராட்டம் நடத்தினர்.

மாநில பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி மௌனப் பேரணி நடத்தினர்

இதே போல் ஷியாம் பஜார் பகுதியில் மாணவி கொலையைக் கண்டித்து பிரம்மாண்டமான பேரணி நடத்தப்பட்டது