​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் இனி லத்தியோடு பேசுங்கள் எஸ்.பி யின் அதிரடி உத்தரவு..! கைவைத்த வெடிகுண்டு முருகேசனுக்கு வலை

Published : Sep 05, 2024 6:25 AM



பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் இனி லத்தியோடு பேசுங்கள் எஸ்.பி யின் அதிரடி உத்தரவு..! கைவைத்த வெடிகுண்டு முருகேசனுக்கு வலை

Sep 05, 2024 6:25 AM

அருப்புகோட்டையில் பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, காவல்துறையினர் இனி பணியின் போது எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான வெடிகுண்டு முருகேசனை தேடிவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள் கையில் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் வாக்கி டாக்கி வாயிலாக உத்தரவிட்டுள்ளார்

மேலும் எந்த காவலராவது தலைக்கவசம் அணியாமல் இருசக்கரவாகனம் ஓட்டுவதை பார்த்தால் உடனடியாக மறித்து அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.