​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில் இருசக்கர வாகனம் திருட்டு... சுவரில் எழுதி வைத்து திருடர்கள் கேட்ட மன்னிப்பு

Published : Sep 04, 2024 12:07 PM

திருச்சியில் இருசக்கர வாகனம் திருட்டு... சுவரில் எழுதி வைத்து திருடர்கள் கேட்ட மன்னிப்பு

Sep 04, 2024 12:07 PM

திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை திருடிச் சென்றுள்ளனர்.

தனியார் வங்கியில் மேனேஜாராக பணிபுரியும் இளங்கோ குடும்பத்துடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், சாரி பிரதர் அண்ட் சிஸ்டர், மன்னித்து விடுங்கள் என கிரேயான் பென்சில் மூலம் சுவற்றில் எழுதி வைத்துள்ளனர்.