​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Published : Sep 04, 2024 10:45 AM

சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Sep 04, 2024 10:45 AM

சேலத்தில் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பவித்ரா என்பவர் வேலையை முடித்துவிட்டு டவுன் பஸ் மூலம் சேலம் பழைய பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பின்னால் நின்ற பெண் ஒருவர் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்து பவித்ரா சத்தமிட்டப்போது நகை திருட முயன்ற பெண் பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடிய நிலையில், சாலையில் நின்ற ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.