​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாம்பரம் அருகே காதலர்களை மிரட்டி பணம் பறித்த காவலர் மற்றும் அவரது நண்பர் போலீசார் கைது

Published : Sep 04, 2024 9:40 AM

தாம்பரம் அருகே காதலர்களை மிரட்டி பணம் பறித்த காவலர் மற்றும் அவரது நண்பர் போலீசார் கைது

Sep 04, 2024 9:40 AM

தாம்பரம் அருகே காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்து வந்த காவலர் மற்றும் அவர் நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மணிவண்ணன் என்பவர் பெண் நண்பருடன் இருந்த தம்மை மிரட்டி லத்தியால் தாக்கி 4 ஆயிரம் ரூபாய் பணம் பறித்துவிட்டுப் போனதாக சேலையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து வாகன பதிவு எண்ணை வைத்து தாம்பரம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த தலைமை காவலர் அருண்ராஜ் மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.