​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

Published : Sep 03, 2024 1:19 PM

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

Sep 03, 2024 1:19 PM

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் மனோஜ் என்பவரின் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் 3 வயது சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனோஜின் ஓட்டுநராக வேலை செய்யும் சுகுமாறன், அங்கேயே உள்ள பணியாளர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுகுமாறனின் 2வது மகன் ரித்தீஷ் நீண்ட நேரமாக காணாததால் தேடிய நிலையில், நீச்சல் குளத்தில் இருந்து உடலை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.