​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மன்னார்குடியில் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

Published : Sep 03, 2024 12:07 PM

மன்னார்குடியில் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

Sep 03, 2024 12:07 PM

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெயநாராயணன், நம்பிராஜன் மற்றும் பீர்முகம்மது இடையே ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த ஜெயநாராயணன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

நம்பிராஜன் மற்றும் பீர்முகம்மதுவை பாமினி ஆற்றங்கரை பகுதியில் கைது செய்ததாகவும், தப்பிக்க முயன்று பாலத்திலிருந்து குதித்த நம்பிராஜ்க்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.