​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஃபேன்சி பொருட்கள் என நினைத்து பெருங்காய டப்பாக்கள் திருட்டு..!

Published : Sep 03, 2024 9:24 AM

ஃபேன்சி பொருட்கள் என நினைத்து பெருங்காய டப்பாக்கள் திருட்டு..!

Sep 03, 2024 9:24 AM

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஃபேன்ஸி பொருட்கள் என நினைத்து, பெருங்காய டப்பாக்கள் அடங்கிய பெட்டியை 2 திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஏராளமான கடைகள் அமைந்துள்ள சத்திரம் வீதியில், மளிகைக்கடை ஒன்றும் ஃபேன்சி பொருட்கள் விற்கும் கடையும் அருகருகே அமைந்துள்ளன.

இடப் பற்றாக்குறை காரணமாக மளிகைக்கடைக்கு வந்திறங்கிய கற்பூரம் மற்றும் பெருங்காய டப்பாக்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை ஃபேன்சி ஸ்டோர் அருகே இறக்கி வைத்துள்ளனர். கடைக்கு பொருட்கள் வாங்குவதுபோல் வந்த 2 ஆசாமிகள், ஆட்கள் நடமாட்டம் இருக்கும்போதே பெட்டியைத் திருடிச் சென்றுள்ளனர்.