​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமல்லபுரத்தில் படகு கவிழ்ந்து எஞ்சின் இறக்கையில் சிக்கி மீனவர் காயம்... தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

Published : Sep 03, 2024 7:24 AM

மாமல்லபுரத்தில் படகு கவிழ்ந்து எஞ்சின் இறக்கையில் சிக்கி மீனவர் காயம்... தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை

Sep 03, 2024 7:24 AM

மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி குப்பம் அருகே கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்து நீருக்குள் விழுந்த மீனவர், எஞ்சினின் இரும்பு இறக்கைகளில் சிக்கி படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு தூண்டில் வளைவை உடனடியாக அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ஓராண்டாகியும் பணிகள் தொடங்காததால், படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.