​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்ற ரவுடி - பரபரப்பான காவல் நிலையம்..!

Published : Sep 02, 2024 3:56 PM

கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்ற ரவுடி - பரபரப்பான காவல் நிலையம்..!

Sep 02, 2024 3:56 PM

சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில், கண்ணாடி துண்டுகளால் கழுத்தில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் ரவுடியை, பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தன்னை காதலிக்குமாறு கல்லூரி மாணவி ஒருவரை மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட சி- பிரிவு ரவுடியான அரவிந்தன், காவல் நிலையத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை உடைத்து தற்கொலைக்கு முயன்றதாகவும், காயம் ஆழமாக ஏற்படவில்லை என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.