​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வ.உ.சி துறைமுகம் வந்துள்ள சிந்து கேசரி நீர்மூழ்கிக் கப்பல்..!

Published : Sep 01, 2024 9:44 PM

வ.உ.சி துறைமுகம் வந்துள்ள சிந்து கேசரி நீர்மூழ்கிக் கப்பல்..!

Sep 01, 2024 9:44 PM

இந்திய கடற்படைக்கு சொந்தமான சிந்து கேசரி என்ற நீர்மூழ்கி கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. 2 ஆயிரத்து 442 டன் எடைகொண்ட இந்த கப்பல், வரும் 6ஆம் தேதி வரை துறைமுகத்தில் நிற்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தக் கப்பல், 21 நாட்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள துறைமுகத்துக்குச் செல்லும் என்றும் கப்பலுக்குத் தேவையான எரிபொருள், ஊழியர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் வாங்கிய பின் கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.