​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமணம் தாண்டிய உறவில் இருந்த மாமியார்.. தெரிந்து கொண்ட மருமகளை தீர்த்துக்கட்டிய அதிர்ச்சி சம்பவம்..!

Published : Sep 01, 2024 5:11 PM

திருமணம் தாண்டிய உறவில் இருந்த மாமியார்.. தெரிந்து கொண்ட மருமகளை தீர்த்துக்கட்டிய அதிர்ச்சி சம்பவம்..!

Sep 01, 2024 5:11 PM

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் அருகே, திருமணம் தாண்டிய உறவில் இருப்பதை  வெளியே சொல்லிவிடக்கூடும் என்பதால், மருமகளுக்கு உணவில் சைனடு வைத்து கொலை செய்த மாமியார், கொலையை மறைத்த கணவர் உட்பட 4 பேரை 75 நாட்களுக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி யாஷிகா பர்வீன் என்பவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக,அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது உடல், உடற் கூறாய்வு செய்யப்பட்டு  கடந்த வாரம் முடிவுகள் வந்தன.

அதில் சைனைடு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், மாமியார் யாஸ்மின், அவரது  உறவினர் காளிப், கணவர் இம்ரான், இம்ரானின் தம்பி முக்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். யாஷ்மின் மற்றும் காளிப் ஆகிய இருவரும் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததை மருமகள் யாஷிகாவுக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.