​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகார்.. 4 பேர் அதிரடி கைது..!

Published : Sep 01, 2024 4:39 PM

அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகார்.. 4 பேர் அதிரடி கைது..!

Sep 01, 2024 4:39 PM

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் தற்காலிக பேராசிரியர்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாட்சப்பில் மாணவிக்ளுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய புகாரில், தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஸ்குமார், முரளிராஜ், ராஜபாண்டி மற்றும் லேப் டெக்னீசியன் அன்பரசு ஆகிய 4 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு பொள்ளாச்சி மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.