​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் போலீசார் சோதனையில் போதைப் பொருள் பறிமுதல்

Published : Aug 31, 2024 11:31 AM

பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் போலீசார் சோதனையில் போதைப் பொருள் பறிமுதல்

Aug 31, 2024 11:31 AM

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் வெளியில் அறை எடுத்து தங்கியுள்ள விடுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், போதை மாத்திரைகள், போதை சாக்லெட்டுகள் மற்றும் போதை பொருட்களை தயாரிக்க தேவையான கருவிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல்  செய்தனர்.

இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 32-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் தனியார் மண்டபத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.