​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை துவங்கும்முன் விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

Published : Aug 31, 2024 9:42 AM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை துவங்கும்முன் விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் உத்தரவு

Aug 31, 2024 9:42 AM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பருவமழை துவங்கும்முன் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

பூந்தமல்லி, திரு.வி.க.நகர், அயனாவரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வைட்ட அவர், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை மோட்டார் பம்புகள் மூலம் உடனுக்குடன் வெளியேற்றும் பணிகள் முழுமையாக நடைபெற வேண்டும் என, அதிகாரிகளை அறிவுறுத்தினார்.