​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்தல்.. கடத்தி வந்தவரை 4 மாதங்களாக அடைத்து சித்திரவதை - 4 பேர் கைது ஒருவரை தேடும் போலீஸ்..!

Published : Aug 30, 2024 4:02 PM

ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்தல்.. கடத்தி வந்தவரை 4 மாதங்களாக அடைத்து சித்திரவதை - 4 பேர் கைது ஒருவரை தேடும் போலீஸ்..!

Aug 30, 2024 4:02 PM

சென்னை திருவல்லிக்கேணியில், துபாயிலிருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்த நபரை, லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வருக பலை கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான சாஜி மோன் துபாயில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்தபோது, துபாய் நண்பர்களான பென்னி, மாலிக் என்பவர்கள் தங்கத்தை கடத்தும் குருவி வேலை செய்தால், 5 லட்சம் பணம் கிடைக்கும் என்றதால், 3 தங்கக் கட்டிகளை ஆசனவாயில் மறைத்து, சென்னை விமான நிலையம் கொண்டு வந்துள்ளார்.

சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை கடுமையாக இருந்ததால் விமான நிலைய கழிப்பறையில் தங்கக் கட்டிகளை வைத்து விட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தங்கத்தை வாங்கக் காத்திருந்த கடத்தல் கும்பல், சாஜிமோனை கடத்தி தங்கம் எங்கே எனக் கேட்டு நான்கு மாதங்களாக துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, ஆசிப் பயஸ், முகமது ஆலிம் உட்பட நான்கு பேரைக் கைது செய்து தலைமறைவாக உள்ள இம்ரான் என்பவரைத் தேடி வருகின்றனர்.