​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி சான்றிதழ் வைத்துக் மூலிகை மருத்துவம் பார்த்த நபர்.. அதிரடியாக கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்த போலீஸ்..!

Published : Aug 30, 2024 3:29 PM

போலி சான்றிதழ் வைத்துக் மூலிகை மருத்துவம் பார்த்த நபர்.. அதிரடியாக கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்த போலீஸ்..!

Aug 30, 2024 3:29 PM

தேனி மாவட்டம், நாகலாபுரம் அருகே போலி மருத்துவ சான்றிதழை வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவம் பார்த்து வந்த ராமசாமி என்பவரை போலீசார் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளத்தை சேர்ந்த நபர் ஒருவர் ராமசாமியின் மதுமதி யோகா மூலிகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது மனைவி தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் தலைமையில் சோதனை நடத்தியதில், சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.