​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாரிசு சான்றிதழ் தர ரூ.3,000 லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாகக் கைது செய்த போலீசார்

Published : Aug 29, 2024 3:26 PM

வாரிசு சான்றிதழ் தர ரூ.3,000 லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.. லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாகக் கைது செய்த போலீசார்

Aug 29, 2024 3:26 PM

திருச்சி மாவட்டம் தாளக்குடியைச் சேர்ந்த ரத்தினகுமார் என்பவரிடம், வாரிசு சான்றிதழ் வழங்க மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

காலமான மாமனாரின் பெயரில் உள்ள சொத்துகளை விற்க தனது மனைவின் பெயரில் வாரிசு சான்றிதழ் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ரத்தினகுமார் விண்ணப்பித்துள்ளார்.

காலதாமதம் ஆனதால், செந்தில்குமாரை சந்தித்து விசாரித்தபோது, அவர் லஞ்சம் கேட்டு அதை பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகக் கைது செய்தனர்.