​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இவரே ஆள வச்சி திருடுவாராம்.. அப்புறம் கம்ப்ளைண்ட் கொடுப்பாராம் - கூட்டாளிகளுடன் வசமாக மாட்டிக்கொண்ட கடை உரிமையாளர்

Published : Aug 29, 2024 11:37 AM



இவரே ஆள வச்சி திருடுவாராம்.. அப்புறம் கம்ப்ளைண்ட் கொடுப்பாராம் - கூட்டாளிகளுடன் வசமாக மாட்டிக்கொண்ட கடை உரிமையாளர்

Aug 29, 2024 11:37 AM

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் துப்பு துலக்கியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவரும் நகை கடைக்கு முக கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு 50 சவரன் நகைகளை திருடிச் சென்றதாக ரமேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட ஹரிஷத் குமாரையும், சுரேந்தர் சிங்கையும் ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, கடை உரிமையாளர் ரமேஷ் குமார் கடனில் சிக்கியதால் அவர்களை வைத்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதும், அதற்காக போலி நகைகளை பயன்படுத்தியதும் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.