​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே நாட்டு கால்பந்து வீரர் உயிரிழப்பு

Published : Aug 29, 2024 7:18 AM

கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே நாட்டு கால்பந்து வீரர் உயிரிழப்பு

Aug 29, 2024 7:18 AM

கால்பந்து போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே நாட்டு கால்பந்து வீரர் வான் இஸ்கியார்டோ, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

27 வயதான வான் இஸ்கியார்டோ, கடந்த வியாழக்கிழமை பிரேசிலில் நடைபெற்ற கிளப்-களுக்கு இடையிலான கால்பந்து போட்டியின்போது மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார்.

சீரற்ற இதய துடிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இஸ்கியார்டோ சிகிச்சை பலனின்றி இறந்தார்.