​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆங்கிலத்தில் பேசத்தெரியாமல் விழித்த மாணவிகள் - கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை சொன்ன சபாநாயகர்..!

Published : Aug 28, 2024 9:59 PM

ஆங்கிலத்தில் பேசத்தெரியாமல் விழித்த மாணவிகள் - கற்றுத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுரை சொன்ன சபாநாயகர்..!

Aug 28, 2024 9:59 PM

அரசுப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கூட ஆங்கில மொழி பேசத் தெரியாத நிலை உள்ளதாக சபாநாயகர் அப்பாவு வருத்தத்துடன் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம், பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சபாநாயகர், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேரை அழைத்து காலையில் என்ன சாப்பிட்டாய் என ஆங்கிலத்தில் கேட்குமாறு கூறினார்.

ஆங்கிலத்தில் பேசத் தெரியாமல் மாணவிகள் திருதிருவென விழித்த நிலையில், மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு ஆசிரியர்கள் தான் கற்றுத்தர வேண்டும் எனவும், தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கூறினார்.