​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கூலி தொழிலாளி உயிரிழந்த விவகாரம்.. காரை நான் ஓட்டவில்லை - ரேகா நாயர் விளக்கம்..!

Published : Aug 28, 2024 5:00 PM

கூலி தொழிலாளி உயிரிழந்த விவகாரம்.. காரை நான் ஓட்டவில்லை - ரேகா நாயர் விளக்கம்..!

Aug 28, 2024 5:00 PM

சென்னை ஜாபர்கான்பேட்டையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது ஓட்டுநர் பாண்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இரவின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரேகா நாயர் அளித்துள்ள விளக்கத்தில், கேரளா செல்வதற்காக தான் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாகவும், காரை தான் ஓட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.