​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்காசியில் நாய் மீது மோதுவதை தவிர்க்க திருப்பிய போது லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்களுக்கு நேர்ந்த சோகம்

Published : Aug 28, 2024 1:53 PM

தென்காசியில் நாய் மீது மோதுவதை தவிர்க்க திருப்பிய போது லோடு ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்களுக்கு நேர்ந்த சோகம்

Aug 28, 2024 1:53 PM

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ, குறுக்கே வந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க திரும்ப முயற்சித்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விவசாய வேலைக்காக திருச்சிற்றம்பலத்தில் இருந்து 15 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆட்டோ வாடியூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஜானகி, வள்ளியம்மாள், பிச்சி ஆகியோர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்தனர்.