​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரியில் நள்ளிரவில் தொடர்ந்து ஒலித்த வங்கி எச்சரிக்கை அலாரத்தால் பொது மக்கள் அச்சம்

Published : Aug 28, 2024 10:36 AM

கன்னியாகுமரியில் நள்ளிரவில் தொடர்ந்து ஒலித்த வங்கி எச்சரிக்கை அலாரத்தால் பொது மக்கள் அச்சம்

Aug 28, 2024 10:36 AM

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் இரவு இடைவிடாது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் மற்றும் குளச்சல் தீயணைப்பு வீரர்கள், வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றதா? என்ற சந்தேகத்தில் முழுவதுமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடத்திய சோதனையில், கண்ட்ரோல் பேனலில் கரப்பான் பூச்சி புகுந்ததில் ஏற்பட்ட மின் கசிவால் எச்சரிக்கை அலாரம் தொடர்ந்து ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து, மின் இணைப்பை துண்டித்து அலாரத்தை தீயணைப்பு வீரர்கள் நிறுத்தினர்.