​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரம்

Published : Aug 28, 2024 10:11 AM

கோவையில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரம்

Aug 28, 2024 10:11 AM

கோவையை அடுத்த பேரூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு சுற்றுச்சூழல் பாதிக்காமல் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நவீன எந்திரத்தை கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் குப்பைகள் ,வாழை, தென்னை,  கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் சேகரிக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரத்தை கொண்டு திடக்கழிவு மேலாண்மையை துவக்கி முழுவதாக குப்பைகளை அப்புறப்படுத்த உள்ளதாக கூறினார்