​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோத்தகிரியில் கடமானை வேட்டையாடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கைது

Published : Aug 28, 2024 9:53 AM

கோத்தகிரியில் கடமானை வேட்டையாடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கைது

Aug 28, 2024 9:53 AM

கோத்தகிரி அருகே, இறைச்சிக்காக கடமானை வேட்டையாடியதாக கூறி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 15 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். சத்யமங்கலம் வழியாக சென்ற பேருந்தில் போலீசார் சோதனையிட்டபோது, பொம்மன் என்பவர் தனது பையில் வைத்து கடமான் இறைச்சியை எடுத்து செல்வது தெரியவந்தது.

அவரிடம்  விசாரணை நடத்தியபோது, அவரை போலவே பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் சேர்ந்து மார்வளா வனப்பகுதியில் கடமானை வேட்டையாடி, இறைச்சியை 15 பேரும் பகிர்ந்துகொண்டதாக பொம்மன் கூறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.