​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாமக்கல்லில் நீண்டகாலமாக வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று எம்.பி.யை முற்றுகையிட்ட ஊர்மக்கள்

Published : Aug 28, 2024 8:08 AM

நாமக்கல்லில் நீண்டகாலமாக வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று எம்.பி.யை முற்றுகையிட்ட ஊர்மக்கள்

Aug 28, 2024 8:08 AM

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கணபதிபாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்ற இடம் அருகே, களியனூர் ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் 34 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷை அவர்கள் முற்றுகையிட்டு, நீண்ட காலமாக தங்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை என்று புகார் கூறினர்.