​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப்பேருந்து மீது அதிவேகமாக வந்த மோதிய கார்.. ஓட்டுநர் உயிரிழப்பு.. 8 பேர் காயம்..!

Published : Aug 27, 2024 7:52 PM

அரசுப்பேருந்து மீது அதிவேகமாக வந்த மோதிய கார்.. ஓட்டுநர் உயிரிழப்பு.. 8 பேர் காயம்..!

Aug 27, 2024 7:52 PM

மதுரை திருமங்கலம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியதில் கார் ஓட்டுநர் கணேசமூர்த்தி என்பவர் உயிரிழந்த நிலையில், அதிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர்.

புளியங்குடியை சேர்ந்த செல்வம் தனது மகனை சென்னை தனியார் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்பும்போது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூரில் எதிரே வந்த பேருந்து மீது கார் மோதியதாக கூறப்படுகிறது.

காரை வேகமாக வந்த பேருந்து சுமார் 50 அடி தூரம் இழுந்துச்சென்றதில், சாலையோரப் பள்ளத்தில் சரிந்து விழுந்து நொறுங்கியதில் ஓட்டுநர் கணேசமூர்த்தி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். சாலைப்பணிகள் காரணமாக நான்கு வழிச்சாலையில், ஒருபுறம் மட்டுமே அனைத்துப் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டிருந்த நிலையில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.