​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகை மீனவர்களை தாக்கி 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

Published : Aug 27, 2024 11:54 AM

நாகை மீனவர்களை தாக்கி 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்களை பறித்துச்சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

Aug 27, 2024 11:54 AM

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

படகு இன்ஜின், ஜி.பி.எஸ், வாக்கி டாக்கி, வலை, செல்போன் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும் அவர்கள் பறித்துச்சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காயங்களுடன், கூடுதலாக வைத்திருந்த இன்ஜினுடன் கரை திரும்பிய மீனவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.