​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டிவனத்தில் பெற்றோர் செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

Published : Aug 27, 2024 11:07 AM

திண்டிவனத்தில் பெற்றோர் செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு

Aug 27, 2024 11:07 AM

திண்டிவனம் ஊரல் கிராமத்தில், பெற்றோர் விலை உயர்ந்த செல்ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த வெற்றிவேல் கடந்த சில தினங்களாகவே தனது பெற்றோரிடம் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு கைபேசி வாங்கித் தருமாறு வற்புறுத்தி உள்ளார்.

பெற்றோர் வாங்கித்தர மறுத்ததால் மனமுடைந்த வெற்றிவேல் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.