​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பத்தூரில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்

Published : Aug 27, 2024 6:54 AM

திருப்பத்தூரில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார்

Aug 27, 2024 6:54 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கடத்தி, தாக்கி பணம் பறித்து வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அசாமைச் சேர்ந்த அபுன் நோசர் என்பவருக்கு ரயிலில் அறிமுகமான நபர் ஒருவன், கடந்த 18ஆம் தேதி வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரை திருப்பத்தூருக்கு வரவழைத்துள்ளான்.

நண்பர்களுடன் அங்கு சென்ற அபுன்நோசர் குழுவைக் கடத்தி அறை ஒன்றில் அடைத்து வைத்த 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாகத் தாக்கி, அவர்கள் கையில் வைத்திருந்த பணம் போக, அவர்களது குடும்பத்தினருக்கு போன் செய்யவைத்து, ஜி பே மூலமும் பணம் பறித்துள்ளனர்.

தொடர்ந்து ஆளில்லாத இடத்தில் அசாம் தொழிலாளர்களை இறக்கி விட்டு மிரட்டி விரட்டியுள்ளனர். மறுநாள் இதே பாணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அந்த கும்பல் கடத்தி பணம் பறித்துவிட்டு தப்பிக்கும்போது, அவர்களில் ஒருவனை தொழிலாளர்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன் மூலம் மற்றவர்களும் போலீசிடம் சிக்கினர்.