​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய விவகாரம் - சி.சி.டி.வி பதிவுகளைக்கொண்டு 4 பேர் கைது..!

Published : Aug 26, 2024 9:16 PM

கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய விவகாரம் - சி.சி.டி.வி பதிவுகளைக்கொண்டு 4 பேர் கைது..!

Aug 26, 2024 9:16 PM

சென்னை, இராயப்பேட்டையில் உள்ள முண்டகக்கன்னி அம்மன்கோயில் திருவிழாவில் மதுபோதையில் ஆடியபடி சண்டையிட்டவர்களை கலைந்து போகும்படி கூறிய பெண் காவலர் கௌசல்யாவை பிளேடால் வெட்டிய விவகாரம் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை கொண்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீதர், அஜய், கிஷோர் மற்றும் சசி ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், கௌசல்யாவை அஜய் வெட்டியது சிசிடிவி பதிவு மூலம் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.