​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியை காண குவிந்த பக்தர்கள்..!

Published : Aug 26, 2024 3:55 PM

முத்தமிழ் முருகன் மாநாட்டு கண்காட்சியை காண குவிந்த பக்தர்கள்..!

Aug 26, 2024 3:55 PM

பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன்மாநாட்டை ஒட்டி அமைக்கப்பட்ட சிறப்பு கண்காட்சியை, கூட்ட நெரிசல் காரணமாக பலரும் முழுமையாக காண முடியாத நிலை ஏற்பட்டது. இதைஅடுத்து, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் கண்காட்சியை காணலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

மாநாடு முடிந்தும் இன்று கண்காட்சி தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளதால், அதை பார்வையிடுவதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். 3D திரையரங்கு மூலம் அறுபடை வீடுகளை நேரில் பார்ப்பது போல உணர்வதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.