​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

Published : Aug 26, 2024 12:45 PM

நீலகிரியில் காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவர் கைது

Aug 26, 2024 12:45 PM

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் எனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். காட்டேரி சோதனைச் சாவடியில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நான்சச் ஒட்டர் லைன் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது காரில் அவுட் காய் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளி ராஜாவை கைது செய்த வனத்துறையினர் ராமகிருஷ்ணன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பன்றியை கருக்க பயன்படுத்தப்படும் ப்ளோலேம்ப், கத்திகள் மற்றும் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகளை பறிமுதல் செய்தனர்.